வினை வகைகள்
வினை வாக்கியம்
பெயர்ச்சொல்லின் தொழிலைக் காட்டுவது வினைச்சொல் ஆகும். வினைச்சொற்கள் முற்று, எச்சம் என்பது மட்டுமில்லாமல் அவை பயன்படுவதன் அடிப்படையில் பலவகைப்படுகிறது.அவை,
- தன்வினை, பிறவினை
- செய்வினை, செயப்பாட்டுவினை
- உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை
தன்வினை, பிறவினை வாக்கியங்கள்
தன்வினை வாக்கியம்
தன்வினை வாக்கியத்தில் ஒரு நபர் தானே ஒரு செயலைச் செய்வது.
பாரி உண்டான்.
இவ்வகை வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது.
பிறவினை வாக்கியம்
ஒரு நபர் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வது.
பாரி உண்பித்தான். இவ்வகை வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது.
- இவ்வாக்கியத்தில் மெல்லொற்று (ந்,ங்) வல்லொற்றாகிப் (த்,க்) பிறவினை ஆயிற்று.
- இவ்வாக்கியத்தில் வல்லொற்று (ட்,ற்) இரட்டித்துப் (ட்ட், ற்ற்) பிறவினை ஆயிற்று.
- பிறவினையாகும்போது வி, பி ஆகிய விகுதிகளில் ஒன்று, சேர்ந்து வருவதும் உண்டு.
- சொல் வடிவை விட, அது உணர்த்தும் பொருளை வைத்தே தன்வினையா, பிறவினையா என அறிதல் வேண்டும்.
செய்வினை செயப்பாட்டுவினை வாக்கியங்கள்
இது செய்வினைத் தொடர் – Active Voice. பொதுவாக செயப்பாட்டு வினையில் எழுவாயுடன் ஆல், ஆன் இவற்றில் ஒன்று நேராகவோ, மறைந்தோ வரலாம்.
செய்வினைத் தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக்கும் விதிகள்
(அ) எழுவாயைச் செயப்படுபொருள் ஆக்க வேண்டும். அதனுடன் மூன்றாம் வேற்றுமை உருபாகிய ‘ஆல்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.
(ஆ) செயப்படுபொருளில் உள்ள, ‘ஐ’ வேற்றுமை உருபை நீக்கி, எழுவாயாக மாற்ற வேண்டும்.
(இ) பயனிலையுடன் ‘படு’, ‘பட்டது’ என்னும் துணைவினைகளைச் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு செயப்பாட்டு வினை – Passive Voice அமையும் என்பதை அறிக. மேலும் சில எடுத்துக்காட்டுகள்.
சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது.
செயப்பாட்டு வினையை செய்வினையாக மாற்றுதல்
இவ்வாறு, செய்வினை, செயப்பாட்டு வினைத் தொடர்கள் அமையும்.
உடன்பாட்டுவினை எதிர்மறைவினை வாக்கியங்கள்
உடன்பாட்டு வினை
ஒரு செயலைச் செய்வதற்கு உடன்பட்ட நிலையைத்தான். உடன்பாட்டு வினை எனப்படுகிறது
- வருகிறேன்
- செய்கிறான்
- செய்வேன்
- பெறுவான்
போன்ற வினைச்சொற்கள் ஒரு வினையைச் செய்வதையோ, செய்யப் போவதையோ அறிவிக்கின்றன. இவற்றை உடன்பாட்டு வினைகள் என்கிறோம்.
எதிர்மறை வினை
ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையை எதிர்மறை வினை எனப்படுகிறது.
- வாரேன் (வர மாட்டேன் என்பது பொருள்)
- செய்யேன் (செய்ய மாட்டேன் என்பது பொருள்)
- செய்யான் (செய்ய மாட்டான் என்பது பொருள்)
- பெறான் (பெற மாட்டான் என்பது பொருள்)
என்னும் சொற்கள் ஒருவன் ஒரு தொழிலைச் செய்ய உடன்படா நிலையை (அல்லது) எதிர்மறை நிலையைப் புலப்படுத்துகின்றன. எனவே இவை எதிர்மறைவினைகள் என்று சுட்டப்படுகின்றன. உடன்பாட்டு வினைச் சொற்களின் இடையில் எதிர்மறை இடைநிலை வந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது.
- செய் + ஆ + ஆன் – செய்யான்
- தெரி + அல் + அன் – தெரியலன்
- வந்து + இல் + அன் – வந்திலன்
இச் சொற்களில், ‘ஆ’, ‘அல்’, ‘இல்’ ஆகியன எதிர்மறைப் பொருள் உணர்த்துகின்றன. பெரும்பாலும் எதிர்மறைக்கு ‘ஆ’கார இடைநிலையே வரும். இக்காலத்தில் மாட்டான், மாட்டேன் என்பன போன்ற சொற்களால் எதிர்மறையைக் குறிக்கிறோம்.
சுருங்கச் சொன்னால், எதிர்மறை இடைநிலைகள் வாராத வினைகள் எல்லாம் உடன்பாட்டு வினைகளே. அவற்றைப் பெற்றிருப்பன எதிர்மறை வினைகளாகும். வினைமுற்றுச் சொற்களில் எதிர்மறை இருப்பது போன்று பெயரெச்ச, வினையெச்சச் சொற்களோடு ‘ஆ’ சேர்ந்தும் எதிர்மறைப் பொருள்படும்.
- கேட்கும் செவி,
- காணும் கண்
இத்தொடர்களில் உள்ள, கேட்கும், காணும் என்னும் சொற்கள் தமக்குப்பின் ஒரு பெயர்ச்சொல் கொண்டு முடிவதால், அவற்றைப் பெயரெச்சம் என்கிறோம். இப்பெயரெச்ச, வினையெச்சச் சொற்களும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலை பெற்று வரும்.
- கேள் + ஆ – கேளாச் செவி
- காண் + ஆ – காணாக் கண்
- செய்ய வந்தேன்,
- செய்து வந்தான்
இத்தொடர்களில் இடம்பெற்றுள்ள செய்ய, செய்து என்னும் சொற்கள் தமக்குப் பின் ஒரு வினைமுற்றுச் சொல்லைக் கொண்டே முடிவதால், வினையெச்சம் என்று சொல்லப் பெறுகின்றன.
- பாராது இருந்தாள்
- எழுதாமல் இருந்தான்
எனவே, உடன்பாட்டு வினைகளே எதிர்மறை இடைநிலை பெற்று, வினைமுற்றுச் சொற்களிலும் எச்சச் சொற்களிலும் எதிர்மறையை உணர்த்தும்.
மேற்கோள்
- விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்